Posts

Showing posts from July, 2019

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

Image
இன்றைய தமிழகம் வணிக துறையில் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் எந்த மாநிலத்தை காட்டிலும் முன்னிலையில் உள்ளது தமிழகத்தின் துறைமுகங்களோ உலக அளவில் மற்ற முன்னணி நாடுகளுடன் போட்டிபோடும் விதத்தில் சிறந்து விளங்குகிறது  இன்று மட்டுமல்ல கிட்டத்தட்ட சங்க காலம் தொட்டே தமிழக துறை முகங்கள் இரவு பகல் பாராமல் இயங்கின என்றால் நம்பமுடிகிறதா..? ஆம் சங்க கால சோழ மாமன்னன் கரிகாற்பெருவளவனின் வணிக தலைநகராக விளங்கிய காவிரிபூம் பட்டினத்தின் துறைமுகமும் அதை சார்ந்த அங்காடிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரவும் பகலும் இயங்கியுள்ளது பகலில் இயங்கிய கடைகளுக்கு நாளங்காடி எனவும் இரவில் இயங்கிய கடைகளுக்கு அல்லாங்காடி எனவும் பெயரிடப்பட்டது இன்றைய சுங்க நடைமுறையும் அப்போதே தொடங்கிவிட்டது போலும் இதனை  "புலிபொறித்துப் புறம்போக்கி" மேற்சொன்ன பட்டினப்பாலை வரிகள் மூலம் காவிரி பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சோழரின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்பது புலனாகிறது தமிழர்கள் பல நாடுகள் கடந்து பல்வேறு மொழி கற்றுனர்ந்து வணிகம் செய்தனர் இதன் காரணமாக தான்   திரைகடல் ஓடியும்