Posts

Showing posts from October, 2019

இந்தளூர் கோழி நடுக்கல்

Image
தமிழகத்தில்  சங்க காலம் தொட்டே போரிலோ அல்லது வேறு ஏதேனும் வீரச்செயலில் ஈடுப்பட்டு வீரமரணம் அடைந்த நபர்களுக்கு அவரின் செயலை நினைவு கூறும் வகையில் நினைவுக்கற்கள் எழுப்பட்டுள்ளன  "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர " என்ற தொல்காப்பிய தொடர்கள் நடுக்கல் எவ்வாறு அமைய‌ வேண்டும் என்றும், அதில் அவ்வீரனின் புகழ் பொறிக்கப்பட்டு வழிப்படப்பட்டுள்ளது என்று மேற்ச்சொன்ன தொல்காப்பிய வரிகள் மூலம் அறியலாம் மேலும் சங்க கால கடையேழு வள்ளள்களின் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் மரணத்திற்க்கு பின் பாடிய புறநானூற்றுப்பாடல் ஒன்றில் நடுக்கல் பற்றி குறிப்பிடுகின்றார் அப்பாடல் பின்வருமாறு    "இல்லாகியரோ காலை மாலை அல்லாகியர் யான் வாழும் நாளே நடுகல் பீலி சூட்டி நார் அரி சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே" (புறம்- 232) தன் நாட்டையே பிறர் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாத இந்நெடுமான் அஞ்சி அவனுக்கு நடுக்கல் எழுப்பி அக்கல்லில் மயிலிறகு சொறுகி இனிய சுவ