Posts

Showing posts from September, 2019

கம்ப வர்மன் கால தா.வேளூர் நடுக்கல்

Image
காதலையும் வீரத்தையுமே இரு கண்களாய் பாவித்து வாழ்ந்த தமிழர்கள் போரிலோ அல்லது ஏதேனும் பூசலிலோ வீரச்செயல் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவுக்கல் எழுப்பி வழிப்பட்டுள்ளனர் இதை வீரக்கல், நடுக்கல் என்றும் வழங்குவர்… தமிழகத்தில் அதிக அளவில் நடுக்கற்கள் செஞ்சி, சேலம், பகுதிகளில் கிடைக்கின்றன நடுக்கற்கள் மனிதர்களுக்கு மட்டும் அல்லாது சேவலுக்கும், நாய்களுக்கு கூட எடுக்கபட்டுள்ளது, நடுக்கற்கள் பெரும்பாலும் காட்டு மிருங்களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்கும், ஆநிரைகளை கவரும் பொருட்டோ, அல்லது கவர்ந்த ஆநிரைகளை மீட்க்கும் பொருட்டோ நிகழ்ந்த போரில் வீரமரணம் அடைந்த வீரனுக்கோ நடுக்கற்கல் எழுப்பட்டுள்ளன  ஆனால் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள தா.வேளூர் எனுமிடத்தில் பல்லவ மன்னன் கம்ப வர்மன் காலத்தில் எடுக்கப்பட்ட நடுக்கல்லானது கள்வர்களால் கடத்தபட்ட பெண்ணை மீட்க நடந்த போரில் அப்பெண்ணை மீட்டு வீர மரணமடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்டுள்ளது அந்நடுக்கல்லின் நகல் படி இதோ நடுக்கல்லில் உள்ள கல்வெட்டின் எழுத்துகளின் அமைப்பு  அதன் வரி படியே அமைத்து கீழே தரப்பட்டுள்ளது 1.(ஸ) ஸி ஸ்

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை

Image
காலம் எத்துணை கோரமானது என்றால் உலகையே கட்டியாண்ட மாமன்னனை கூட உரு தெரியால் அழித்து விடக்கூடியது  மன்னர்களுக்கே இந்நிலையென்றால் அவர்களின் கோநகர்கள் மட்டும் நிலைத்திருக்குமா என்ன..? உலகெங்கும் தமிழக முத்துக்களையும், வாசனை திரவியங்களையும், கொண்டு சேர்த்து தமிழகத்தை தேடி ரோமானியரையும், கிரேக்கரையும், சீனரையும் ஓடிவரச்செய்த காவிரிபூம்பட்டிணம், கொற்க்கை, முசிறி போன்ற உலகப்புகழ் பெற்ற துறைமுகப்பட்டிணங்கள் கண்ணுக்கு தெரியாமல் காற்றோடு கலந்தது காலத்தின் கோர விளையாட்டே இதே காலத்தின் விளையாட்டால் தன் பெருமைகளை இழந்த ஊர் தான் சோழபுரம் தமிழகம் முழுதும் ஒரே கொடையின் கீழ் ஆட்சி புரிந்த சோழர்கள் தங்களின் பெயரில் பல ஊர்களையும் வளநாடுகளையும் உருவாக்கினர் ஏற்கனவே இருந்த ஊர்களுக்கும் கூட பெயர் மாற்றம் செய்தனர்... சோழபுரம் இந்த பெயரில் தமிழகம் முழவதும் பல சிற்றூர்கள் இருந்தாலும் வேலூர் அருகேயுள்ள சோழவரம் எனும் இயற்கை எழில் கொஞ்சும் தற்போதைய சிற்றூர் 9ம் நூற்றாண்டு முதலே சிறப்புடன் இருந்துள்ளது,  சோழவரம் பல்லவர் காலத்தில் இவ்வூர் படூவூர் கோட்டத்து பங்காள நாட்டு பிரிவிலும், மாமன்னர் ராச ராசன்சோழர் காலத்தி