Posts

Showing posts from February, 2020

ஐ தந்த திருநாதர் குன்று

Image
சமண மதம் வைதிக மதத்தின் எழுச்சிக்கு பின்பு குன்றுகள் சூழ்ந்த நடுநாட்டிலும் மதுரையிலும் தஞ்சம் புகுந்து மெல்ல வளர்ந்துள்ளது வந்துள்ளது இன்றும் தமிழத்தின் பிற பகுதிகளை காட்டிலும் அப்பகுதிகளில் தான் சமணர் அதிகம் வாழ்கின்றனர்  முக்கியமாக திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் பலவிடங்களில் சமணர் கற்படுகைகளும் கற்சிலைகளும் மிகுந்து காணப்படுகின்றது  சமணர்களின் கற்படுகைகளின் அருகில் பொதுவாக அப்படுகைகளை தானமாய் செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்டிருக்கும் அவ்வாறு செஞ்சி முழுவதும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் இருந்தாலும்  செஞ்சியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள திருநாதர் குன்று என்ற பெயருடைய சமணர் வாழ்விடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது சமணர்களுக்கு மட்டுமின்றி  அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பு மிக்க ஒரு தடத்தை கொண்டது இத்திருநாதர் குன்று ஐ என்னும் எழுத்து பொறித்த கல்வெட்டு முதன்முதலில் இத்திருநாதர் குன்றில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது  (படம்: திருநாதர் குன்று கல்வெட்டில் ஐ எனும் எழுத்து ) கி.பி 5ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு முந்துதம

தென்சேந்தமங்கலம் சமணர் ஆலயம்

Image
கடைசங்க காலம் தொடங்கி, களப்பிரர் காலம் கடந்து , பல்லவர் காலத்தில் தமிழகெங்கும் பரந்திருந்த சமணம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்  சைவ சமயத்ததை தழுவிய பின் , மேலும் சைவ, வைணவ சமயத்தின் எழுச்சிக்கு பின் சமண சமயம் தொண்டை நாட்டை விட்டு மலைகள் சூழ்ந்த நடுநாட்டில் பரவியது அன்று பரவிய சமணத்தின் தாக்கம் இன்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும், செஞ்சியை சுற்றியும்  காணப்படுகின்றது இவ்விடங்களில் பலவூர்களில் வீழ்ந்து கிடந்த சமண மதத்தின் பழந்தடயங்கள் இன்றும் பழங்கோவில்களை புதுப்பித்தும்,பழஞ்சிற்பங்களை கொண்டு புதிய கோவில்களை எடுப்பித்தும் சமண சமயத்திள்க்கு புத்துயிர் அளித்து வருகின்றனர் அவ்வாறமைந்த சிறு சமணர் ஆலயம் தான் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்திலுள்ள தென்சேந்தமங்கலத்திலுள்ள பார்சுவநாதர் ஆலயம்  இவ்வூர் வந்தவாசியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்சேந்தமங்கலத்திலுள்ள பார்சுவநாதர் ஆலயம்  23வது தீர்த்தங்கரரான பார்சுபதநாதருக்காக எழுப்பபட்டுள்ளது   இக்கோவிலின் கொடிமரத்தினை சுற்றியும், கோபுரங்களிலும் சமண தீர்த்தங்கரர்களின் சிறப்பங்கள் காணப்படுகின்றது மேலும் ஒரு தனியறையில் ஏறக்குறைய 10ம

இடையார்பாக்கம் மகாதேவர் கோவில்

Image
பல்லவர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை( இன்றைய சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒருப்பகுதி )கைப்பற்றிய சோழர்கள் பல்லவர்களை போன்றே தொண்டை மண்டலம் முழுவதும் கோவில்களையும் நீர்நிலைகளையும் ஏற்ப்படுத்தினர் குறிப்பாக தொண்டை மண்டலத்தில் மட்டும் மிகுதியாக காணப்படும் யானையின் பின்புறத்தினை போன்ற அமைப்பை உடைய தூங்காணை மாடக்கோவில்களை எழுப்பினர் அவ்வகை கோவில்களில் ஒன்று தான் பிற்கால சோழரான முதலாம் குலோத்துங்க சோழரால் எழுப்பப்பட்ட இடையாற்று பாக்கம் கோவில் இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழரின் பதிமூன்றாவது ஆட்சி ஆண்டில் எடுப்பிக்கப்பட்டுள்ளது அக்காலத்தில் இக்கோவில் இறைவன் "திருப்படக்காடுடைய மகாதேவர்" என்று அழைக்கப்பட்டுள்ளார் மேலேயுள்ள கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழரின் 13 ம் ஆட்சியாண்டில் ஆருர் உடையான் வைத்திய நாதன் திருச்சிற்றம்பலம் உடையான் என்பவர் இக்கோவிலுக்கு நில தானம் அளித்த செய்தியை தருகின்றது அடுத்த கல்வெட்டு முதற்க்குலோத்துங்கனின் 37வது ஆட்சியாண்டை சேர்ந்தது இதில் இக்கோவில் இம்மன்னனின் ஆணைப்படி சந்திர சேகரன் இரவி எனும் சோழேந்திர சிங்க ஆசாரி எனும்