Posts

Showing posts from 2020

அபராஜித்தனின் வேலஞ்சேரி செப்பேடு

Image
வேலஞ்சேரி செப்பேடு தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணம் , இச்செப்பேடு கிடைக்கும் வரை பல்லவ அரசர்களான கம்பவர்மன் , நிருபதுங்கவர்மன் , அபராஜித்தவர்மன் பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மனின் மகன்கள் தான் என்று அனைத்து வரலாற்று அறிஞர்களும் கருதினர் ஆனால் இந்த செப்பேடு தான் இந்த கருதுகோள்களை பொய்யாக்கியது செப்பேட்டின் அமைப்பு இந்த செப்பேடு இன்றைய திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள வேலஞ்சேரி எனுமிடத்தில் 1977 ம் ஆண்டு கண்டறியப்பட்டது , மொத்தம் ஐந்து ஏடுகளையும் , இந்த ஏடுகளை இணைக்கும் வளையத்தில் பல்லவர்களின் காளைச்சின்னமும் அதனை சுற்றி பல்லவ அரசன் அபராஜித்தன் மற்ற குல அரசர்களுக்கு விடுக்கும் ஆணை என்று பொறிக்கப்பட்டுள்ளது , வழக்கமான பிற்கால பல்லவர் செப்பேடுகளை போல் இந்த செப்பேடும் வட மொழி மற்றும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது வடமொழிப் பகுதியை பெரிய காவியங்களை எழுக்கூடிய ஶ்ரீகுமரனின் மகன் மகாதேவனும் , பல்லவரின் அரசு சின்னத்தை விடேல் விடுகு பெருங்கண்ணனும் , தமிழ் பகுதியை பொதினி மகாதேவபட்டனும் இந்த செப்பேட்டை காஞ்சியில் பிறந்த சிற்பி விஜயன்னாவும் செதுக்கியுள்ளார் இவர்களின் இந்த

ராஜராஜேஸ்வரம் சிவபுரம் - ஒரகடம்

Image
சிவபுரம்  இந்த ஊர் காஞ்சிபுர மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள ஒரு சிற்றூர் இந்த ஊர் முதலாம் இராசேந்திர சோழரின் 12 ம் ஆட்சி ஆண்டு வரை  உரோகடம்  என்றும் 13 ம் ஆட்சி ஆண்டு முதல்  சிவபுரம்  என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது இவ்வூரில் உள்ள சிவாலயம்  முழுவதும் கருங்கற்களால் அமைந்த ஒரு தள விமான அமைப்பையும் கொண்டது இந்த சிவாலயம் சோழ  மாமன்னர் முதலாம் இராசராசன்  ( 985 -1014 ) ஆட்சியின் 24 வது ஆண்டில் ஏற்கனவே இருந்த கோவிலை புதுப்பித்தோ அல்லது புதியதாகவோ கட்டப்பட்டுள்ளது     ராஜராஜேஸ்வரத்தின்      முகப்பு கோவிலின் கருவறை , முகமண்டபம் , ஆளுயர தூவர பாலகர்கள் என இராச இராசரின் தனித்துவ கட்டிட பாணியை தாங்கி நிற்கின்றன விமானமும் இராச இராசன் தன் பாட்டன் அரிஞ்சிய சோழருக்கு எடுப்பித்த பள்ளிப்ழடையின் விமான அமைப்பை நினைவூட்டுகின்றது  விமானத்தின் அமைப்பு சோழர் கால எழில்மிகு கோட்ட சிற்பங்களும் , சண்டிகேஸ்வர் சிற்பங்களும் இக்கோவிலுக்கு இன்னும் அழகூட்டுகின்றன தேவக்கோட்ட சிற்பங்கள் மற்றும் சண்டிகேஸ்வர் சிற்பம் துவார பாலகர்கள் கல்வெட்டு தகவல்கள் கோவிலின் சுற்று சவர் முழுதும் கல்வெட்டுகள் நிரம்ப காணப்படுகின்ற

பல்லவர்களின் முதல் கல்வெட்டு - மஞ்சிக்கல்லு கல்வெட்டு

Image
களப்பிரர்களை வீழ்த்தி காஞ்சியை கைப்பற்றியவர்கள் எனக்கருதப்படும் பல்லவர்களின் ஆட்சி தொண்டை மண்டலம் தொடங்கி சோழநாடு வரை பரவியிருந்தது கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தின் வடப்பகுதியை  ஆண்ட பல்லவர்கள் தமிழக்திற்கு ஆற்றிய பணிகள் பல பல ஏரிகள் , கோவில்கள் , குடைவரைகள் போன்றவற்றை உருவாக்கினர் பல்லவர்கள் நமக்களித்த கலைச்செல்வங்களின் ஒன்றான காஞ்சி கைலாசநாதர் ஆலய கங்காதரர் வடதமிழகம் மற்றம் தெலுங்கானாவில் சில இடங்களில்   பல்லவர்கள் கல்வெட்டுகள் உள்ளன , ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்ட பல்லவர் கல்வெட்டுகளில் காலத்தால் முதன்மையானது தெலுங்கானவிலுள்ள  குண்டூர் அருகிலுள்ள மஞ்சிக்கல்லுவில் கிடைத்த முற்கால பல்லவன் முதலாம் சிம்மவர்மனின் கல்வெட்டு சிம்மவர்மனின் மஞ்சிகல்லு கல்வெட்டு இந்த கல்வெட்டில் தன்னை பரத்வாஜ மாமுனியின் கோத்திரத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்தவன் என்று கூறிக்கொள்கின்றான் மேலும் இக்கல்வெட்டு இவ்வரசன் தன் சக்தியையும் தனக்கு வரக்கூடிய வரக்கூடிய நன்மைகளையும பெருக்கிக்கொள்ள கம்பளி போர்வைகளை பரிசளித்தைப்பற்றி கூறுகின்றது தகவல்கள்: Epigraphy Indica 32 Inscriptions

குணபதேயம் செப்பேடு - அரச குல பெண்கள் தானம் அளித்து பற்றி பகரும் முதல் ஆவணம்

Image
தமிழக வரலாற்றில்  பெண்களின் பங்கு அலாதியானது , சோழ அரசி செம்பியன் மாதேவி , லோகமாதேவி , குந்தவை நாச்சியார் போன்று பல அரச குல பெண்கள் , தானங்களை சாதரண குடிமகன் தொடங்கி , மிகப்பெரிய கோவில்கள் வரை தானங்கள் வழங்கியுள்ளனர் இவற்றை தமிழகமெங்கும் உள்ள  கல்வெட்டுகளும் , பலசெப்பேடுகளும் பகர்கின்றன , இவ்வகையில் காலத்தால் முற்பட்டது , முற்கால பல்லவ இளவரசன் விஜய புத்தவர்மனுடைய மனைவி சாருதேவியினுடையது (கி.பி 350) (செப்பேட்டினை இணைக்கும் வளையம் இதில் பல்லவர்களின் சின்னமான காளையின் உருவம் உள்ளதாய் குறிப்புகள் உள்ளன )  மொத்தம் மூன்று ஏடுகளில் பதினாரு வரியில் பிராகிருத மற்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த செப்பேடு , தற்போது இலண்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்து கொண்டுள்ளது  செப்பேட்டின் தகவல்கள் ஶ்ரீ விஜயஸ்கந்தவர்மனுடைய ஆட்சியில்  யுவமகராஜனும் , பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த பல்லவர் வம்சத்தை சேர்ந்த ஶ்ரீவிஜயபுத்தவர்மனுடைய மனைவியின் சாருதேவியின் கட்டளை ராஜதாடாகத்தின்.அருகேயுள்ள குடிநீர் கிணற்றின் வலதுபுறம் தற்போது பயிரிட்டு கொண்டிருக்கும் நிலத்தை  மஹாதரகம் எனும் ஊரில் உள்ள தேவகுலத்தின் (ஆலயம்)

பல்லாவரம் பல்லவர் குடைவரை

Image
மகேந்திரவர்மரின் மண்டகப்பட்டு பல்லவ கிரந்த கல்வெட்டு குடைவரைகள் - பாறைகளை குடைந்தெடுத்து கோவில்களையோ, மண்டபங்களையோ உருவாக்குவதின் பெயர் தான் குடைவரைகள்  இக்கலை வடத்தமிழக்த்தில் பல்லவர்களாலும் தென் தமிழ்கத்தில் பாண்டியர்களாலும் அறிமுப்படுத்த பட்டது  பல்லவ பேரரசன் முதலாம் மகேந்திரவர்மன் (கிபி 600 - 630 ) இக்குடவரைக்கலையை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு எனுமிடத்தில் அறிமுகப்படுத்துகின்றான்  இக்குடைவரையிலுள்ள கல்வெட்டில் சிவ, விஷ்ணு ,  பிரம்மாவுக்கு அழியக்கூடிய சுதையாலும், உலோகத்தாலும் , சுண்ணாம்பாலும் கட்டாமல் விசித்ர சித்தன் பாறையால் குடைந்து எழப்பிய குகைக்கோவில் எனும் பொருட்படும் பல்லவ கிரந்த கல்வெட்டு அமைந்துள்ளது மண்டகப்பட்டை போன்றே இப்பல்லவ மன்னன் மாமண்டூரிலும் அதனைத்தொடர்ந்து சென்னையிலுள்ள  பல்லவாரத்திலும் (பல்லவபுரம்) குடைவரைகளை எடுப்பித்தார் பல்லாவரம்   தன் பெயரிலேயை பல்லவனைச்சுமக்கும் இவ்வூரில்  கண்டெடுக்கபட்ட கற்கோடாரிகளை கொண்டே இந்தியாவில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று  ஆங்கிலையே ஆராய்சியார்களால் இந்திய தொல்லியல் தேடல்களுக்கு தொட

ஐ தந்த திருநாதர் குன்று

Image
சமண மதம் வைதிக மதத்தின் எழுச்சிக்கு பின்பு குன்றுகள் சூழ்ந்த நடுநாட்டிலும் மதுரையிலும் தஞ்சம் புகுந்து மெல்ல வளர்ந்துள்ளது வந்துள்ளது இன்றும் தமிழத்தின் பிற பகுதிகளை காட்டிலும் அப்பகுதிகளில் தான் சமணர் அதிகம் வாழ்கின்றனர்  முக்கியமாக திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் பலவிடங்களில் சமணர் கற்படுகைகளும் கற்சிலைகளும் மிகுந்து காணப்படுகின்றது  சமணர்களின் கற்படுகைகளின் அருகில் பொதுவாக அப்படுகைகளை தானமாய் செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்டிருக்கும் அவ்வாறு செஞ்சி முழுவதும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் இருந்தாலும்  செஞ்சியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள திருநாதர் குன்று என்ற பெயருடைய சமணர் வாழ்விடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது சமணர்களுக்கு மட்டுமின்றி  அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பு மிக்க ஒரு தடத்தை கொண்டது இத்திருநாதர் குன்று ஐ என்னும் எழுத்து பொறித்த கல்வெட்டு முதன்முதலில் இத்திருநாதர் குன்றில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது  (படம்: திருநாதர் குன்று கல்வெட்டில் ஐ எனும் எழுத்து ) கி.பி 5ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு முந்துதம

தென்சேந்தமங்கலம் சமணர் ஆலயம்

Image
கடைசங்க காலம் தொடங்கி, களப்பிரர் காலம் கடந்து , பல்லவர் காலத்தில் தமிழகெங்கும் பரந்திருந்த சமணம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்  சைவ சமயத்ததை தழுவிய பின் , மேலும் சைவ, வைணவ சமயத்தின் எழுச்சிக்கு பின் சமண சமயம் தொண்டை நாட்டை விட்டு மலைகள் சூழ்ந்த நடுநாட்டில் பரவியது அன்று பரவிய சமணத்தின் தாக்கம் இன்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும், செஞ்சியை சுற்றியும்  காணப்படுகின்றது இவ்விடங்களில் பலவூர்களில் வீழ்ந்து கிடந்த சமண மதத்தின் பழந்தடயங்கள் இன்றும் பழங்கோவில்களை புதுப்பித்தும்,பழஞ்சிற்பங்களை கொண்டு புதிய கோவில்களை எடுப்பித்தும் சமண சமயத்திள்க்கு புத்துயிர் அளித்து வருகின்றனர் அவ்வாறமைந்த சிறு சமணர் ஆலயம் தான் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்திலுள்ள தென்சேந்தமங்கலத்திலுள்ள பார்சுவநாதர் ஆலயம்  இவ்வூர் வந்தவாசியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்சேந்தமங்கலத்திலுள்ள பார்சுவநாதர் ஆலயம்  23வது தீர்த்தங்கரரான பார்சுபதநாதருக்காக எழுப்பபட்டுள்ளது   இக்கோவிலின் கொடிமரத்தினை சுற்றியும், கோபுரங்களிலும் சமண தீர்த்தங்கரர்களின் சிறப்பங்கள் காணப்படுகின்றது மேலும் ஒரு தனியறையில் ஏறக்குறைய 10ம

இடையார்பாக்கம் மகாதேவர் கோவில்

Image
பல்லவர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை( இன்றைய சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒருப்பகுதி )கைப்பற்றிய சோழர்கள் பல்லவர்களை போன்றே தொண்டை மண்டலம் முழுவதும் கோவில்களையும் நீர்நிலைகளையும் ஏற்ப்படுத்தினர் குறிப்பாக தொண்டை மண்டலத்தில் மட்டும் மிகுதியாக காணப்படும் யானையின் பின்புறத்தினை போன்ற அமைப்பை உடைய தூங்காணை மாடக்கோவில்களை எழுப்பினர் அவ்வகை கோவில்களில் ஒன்று தான் பிற்கால சோழரான முதலாம் குலோத்துங்க சோழரால் எழுப்பப்பட்ட இடையாற்று பாக்கம் கோவில் இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழரின் பதிமூன்றாவது ஆட்சி ஆண்டில் எடுப்பிக்கப்பட்டுள்ளது அக்காலத்தில் இக்கோவில் இறைவன் "திருப்படக்காடுடைய மகாதேவர்" என்று அழைக்கப்பட்டுள்ளார் மேலேயுள்ள கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழரின் 13 ம் ஆட்சியாண்டில் ஆருர் உடையான் வைத்திய நாதன் திருச்சிற்றம்பலம் உடையான் என்பவர் இக்கோவிலுக்கு நில தானம் அளித்த செய்தியை தருகின்றது அடுத்த கல்வெட்டு முதற்க்குலோத்துங்கனின் 37வது ஆட்சியாண்டை சேர்ந்தது இதில் இக்கோவில் இம்மன்னனின் ஆணைப்படி சந்திர சேகரன் இரவி எனும் சோழேந்திர சிங்க ஆசாரி எனும்