குணபதேயம் செப்பேடு - அரச குல பெண்கள் தானம் அளித்து பற்றி பகரும் முதல் ஆவணம்
தமிழக வரலாற்றில் பெண்களின் பங்கு அலாதியானது , சோழ அரசி செம்பியன் மாதேவி , லோகமாதேவி , குந்தவை நாச்சியார் போன்று பல அரச குல பெண்கள் , தானங்களை சாதரண குடிமகன் தொடங்கி , மிகப்பெரிய கோவில்கள் வரை தானங்கள் வழங்கியுள்ளனர் இவற்றை தமிழகமெங்கும் உள்ள கல்வெட்டுகளும் , பலசெப்பேடுகளும் பகர்கின்றன , இவ்வகையில் காலத்தால் முற்பட்டது , முற்கால பல்லவ இளவரசன் விஜய புத்தவர்மனுடைய மனைவி சாருதேவியினுடையது (கி.பி 350)
(செப்பேட்டினை இணைக்கும் வளையம் இதில் பல்லவர்களின் சின்னமான காளையின் உருவம் உள்ளதாய் குறிப்புகள் உள்ளன )
மொத்தம் மூன்று ஏடுகளில் பதினாரு வரியில் பிராகிருத மற்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த செப்பேடு , தற்போது இலண்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்து கொண்டுள்ளது செப்பேட்டின் தகவல்கள்
ஶ்ரீ விஜயஸ்கந்தவர்மனுடைய ஆட்சியில்
யுவமகராஜனும் , பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த பல்லவர் வம்சத்தை சேர்ந்த ஶ்ரீவிஜயபுத்தவர்மனுடைய மனைவியின் சாருதேவியின் கட்டளை ராஜதாடாகத்தின்.அருகேயுள்ள குடிநீர் கிணற்றின் வலதுபுறம் தற்போது பயிரிட்டு கொண்டிருக்கும் நிலத்தை மஹாதரகம் எனும் ஊரில் உள்ள தேவகுலத்தின் (ஆலயம்) பகவான் நாரயணுக்கு என்னுடைய ஆயுள் , வலிமை , வளர்ச்சிகாக நிலம் தானாமாய் கொடுக்கப்படுகின்றது
இந்த விவரத்தை அனைத்து அரசு அதிகாரிகளும் அறிந்து அனைத்து வரி விலக்குகளும் பெற்று தரவேண்டும் இதுதான் செப்பேட்டின் தகவல்
மேலும் இருதியில் உள்ள சமஸ்கிருத வரிகள் நிலம் தானம் கொடுப்பதின் நன்மைகளையும் , அந்நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளையும் கூறுகின்றது
மேலும் தமிழக்தின் இருண்ட காலம் எனக்கருதப்பட்ட காலத்தில் இருந்த பெண்களின் நிலையைக்கூறுகின்றது
இந்த செப்பேடு இன்றைய தெலுங்கானவிலுள்ள குண்டூர் அருகேயுள்ற குணபதேயம் எனும் ஊரில் கிடைத்ததால் குணேபதயம் செப்பேடு எனப்படுகின்றது
தகவல்கள் :
பல்லவர் காலச்செப்பேடுகள் - மு.இராசேந்திரன்
இருண்டகாலமா..? - கலைக்கோவன்
The Indian Antiquary Vol. 9 பக்கம் 100 (படங்கள்)
Comments
Post a Comment